செய்குத்தம்பி பாவலர்
செய்குத்தம்பி பாவலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (ஜூலை 31, 1874- பெப்ரவரி
13, 1950) தமிழ்எழுத்தாளராவார்.
தமிழ் இலக்கணஇலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற
செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச்
10ஆம் தேதி சென்னையில்தமிழ் அறிஞர்கள் முன்னிலையில்
சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர்
.
சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள்நாயக
மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி,
திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப்
பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை
நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த
விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை
காவியங்களையும் எழுதியவர்.
பாவலர் அவர்கள் சீரிய தமிழறிஞர் மட்டுமின்றி
அயல்நாட்டுத் துணிகள் புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு
போன்ற இயக்கங்களில் தீவிர பங்கேற்று நாட்டிட்ன
விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.