Tuesday, May 5, 2009

SADAVATHANI SHAIK THAMBI PAVALAR ( STAMP )

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 19:12:02 | Permalink | No Comments »

Monday, May 4, 2009

PAVALAR STAMP

Sheik Thambi Pavlar FDC from India

FDC Name:  Sheik Thambi Pavlar.

Issue Date:  31st DEC’2008

Details
:   Sheik Thambi Pavalar was born on 31st JUL’1874. He was having good knowledge of tamil grammar and literature.

He wrote many books and more important among them are “Thirukkottaru”, Pathirthupathu Anthathi.He was an authority on “Kamba Ramayanam”.

He was also an orator who could hold the audience spellbound.

He is popularly known as “Sadavadani”. which means one who has a grasp on many different aspects of knowledge at a moment.
 
On 10th March 1907 he performed Sathavathana Programme in the presence of Tamil Scholars and got appreciation.

 He took part in the Independence struggle of India. He died on 13th FEB’1950.

  • Denomination 500p
  • 0.4 Million stamps Printed
  • Stamps printed in India Security Press,Nasik
  • FDC & Cancellation design by Alka Sharma
Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 21:05:45 | Permalink | No Comments »

Sunday, May 3, 2009

செய்குத்தம்பி பாவலர்

செய்குத்தம்பி பாவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (ஜூலை 31, 1874- பெப்ரவரி
 13
, 1950) தமிழ்எழுத்தாளராவார்.

தமிழ் இலக்கணஇலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற
செய்குத்தம்பி பாவலர் அவர்கள்
1907-ஆம் ஆண்டு மார்ச்
10
ஆம் தேதி சென்னையில்தமிழ் அறிஞர்கள் முன்னிலையில்
 சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர்
.

சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள்நாயக
 மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி,
 திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப்
 பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
 நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை
 நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த
 விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை
 காவியங்களையும் எழுதியவர்.

பாவலர் அவர்கள் சீரிய தமிழறிஞர் மட்டுமின்றி
அயல்நாட்டுத் துணிகள் புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு
போன்ற இயக்கங்களில் தீவிர பங்கேற்று நாட்டிட்ன
 விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 15:15:09 | Permalink | No Comments »

“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

ஜூலை 31 - “சதாவதானிசெய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

Kannan Natarajan  
Wyświetl profil   Translate to polskiTranslated (View Original)

 Więcej opcji 30 Lip 2008, 22:37

lna: Śr. 30 Lip 2008 22:37


Temat: ஜூலை 31 - “சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்
 பாரில் புகழ்படைத்த பண்டிதன் - சீரிய
 செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!”

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப்
பாடினார்.

*”வாழையடி வாழையென வந்த
 திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!”*

 என்ற
இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க
 
குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த
ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர்,

நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும்
ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு
 மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல்
பிறந்தார்.

“தொட்டனைத்தூறும் மணற்கேணி,”
என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில்
தமிழுணர்வு
ஊற்றெடுத்தது.

சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம்
 முறையாகத் தமிழ் பயின்ற
பாவலர்,
 இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

அந்நாளில் இராமலிங்க
அடிகளாரின் அருட்பாவை
 ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர்.

இதனை அறிந்த
பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார்.

அதற்கான கூட்டம்
சென்னையில் ஏற்பாடாயிற்று.
 
அக்கூட்டத்தில் தொடக்கமாக,

“சாதிகுலம் சமயமெல்லாம்
 தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு
வமுதளித்த தணித்
தலைமைப் பொருளே,
 ஆதிநடு கடைகாட்டா
அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம்
 மற்றனைத்து நின்ற
மொழியே,
 ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க
 எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம்
உருவுறச்
செய்யுறவே,
 ஜோதிமயமாய் விளங்கித்
 தனிப்பொதுவில் நடிக்கும்
 தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!”

இப்பாடலை முழங்கினார்.

கேட்ட அவையோர் இவருடைய
சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து
கையொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பல அரங்குகளில்
தமது வாதத் திறமையால்
*”அருட்பா அருட்பாவே”* என்று நிறுவினார்.

 த.மு.சா. காஜா முகைதீன்

மரபுப் பாவளம் மிக்க பாவலர்
 சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார்.

தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை,
அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி
வேண்டினார்.
 
அப்பொழுது,

சிரமாறுடையான் செழுமா வடியைத்,
 திரமா நினைவார் சிரமே பணிவார்,
 பரமா தரவா பருகாருருகார்,
 வரமா தவமே மலிவார் பொலிவார்
.”

என்னும் பாடலைப்பாடி,

  -சிரம் ஆறுடையான் -
 சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான், 

   - சிரம்மாறு உடையான் -
 இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி, 

   - சிரம் ஆறுடையான் -
 ஆறுதலைகளை உடைய முருகன், 

   - சிரம் “ஆறு” உடையான் -
 திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட
   பள்ளிகொண்ட திருமால்
,
   - சிரம் ஆறு உடையான் -
தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்

என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார்.
 

இக்கவிச் சுவையில்

*”ஒரு நாமம் ஓர்
உருவம் ஒன்றும் இல்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,”*என்ற

*திருவாசகத் தேனையும்*,

* “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”*

என்ற *திருமந்திரச்
சத்தையும்*

பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!


அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது.

 
ஒருமுறை மதுரைச்
தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர்,
 தமிழ் விருந்துண்டு மகிழ
கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

   - சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,
   - இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,
   - கந்தசாமிக் கவிராயர்

ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர்.
 
அங்குப் பாவலரும் வருகை தந்து
அமர்ந்தார்.

பாவலரின் நினைவுக் கலையின்
 பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது.

ஆய்வாளர்
சுப்பிரமணிய ஐயர் ஏதேனும்
 புராண நூலில் ஏழுமுறை “நோக்க” என்ற சொல் வந்துள்ள
பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க,

 பாவலர்,
 
கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,
 கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,
 எதிராத் தரத்தை நோக்குவர்,
 அவையினில் அபுஜகில் - உடனே
 உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை.”

என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு
அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம்
மலிந்தவை.
 

*”முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல்
போற்றுவம்,”* என்பதற்கு எடுத்துக்காட்டானவை.

   - நபிகள்நாயக மான்மிய மஞ்சரி,
   - கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
   - திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி,
   - திருநாகூர் திரிபந்தாதி,
   - நீதிவெண்பா,
   - சம்சுதாசீன் கோவை, மற்றும்
   - தனிப்பாடல் திரட்டு

முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.

பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர்.
 
அறிஞர்
அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார்.
 
அந்த நீதிகளே அவரிடம்
வெண்பாக்களாக மலர்ந்தன.

   - அறியாமையை அகற்றுவது கல்வி;
   - அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி;
   - இறையருளைப் பெருக்கி
 ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி,

அதனை,
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
 மருளை யகற்றி மதிக்கும் தெருளை
 அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம்,
 பொருத்துவதும் கல்வியென்றே போற்று
.”

என்பதும்,

திருவள்ளுவர் கூறிய

   - கூடாஒழுக்கம்,
   - கூடாநட்பு,
   - சிற்றினம் சேராமை

என்ற சீரிய நன்நெறியை,

“கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம்,
 நாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில்
 பச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள்
 அச்சோ அழிந்தொழியு மால்.”

என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன.
 
அவர் எழுதிய “சீட்டுக் கவிகள்”
இலக்கியத்தரம் வாய்ந்தவை.
 

பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது,
கோட்டாற்றிலிருந்து தம் நண்பர்
 பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த
சீட்டுக் கவியில்,

“ஆகஞ் சுகமா?
 அடுத்தவர்கள் சேமமா?
 மேகம் வழங்கியதா?
 மேலுமிந்தப்-போகம்
 விளையுமா? இன்னுமழை வேண்டுமா?
 செல்வம் விளையுமா? ஊர்செழிக்கு மா?”

என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்
ஆர்வமுள்ள பாவலர்,
 தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது:

“கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும்
 மறவாமல் கருத்தும் கொண்டு
 முற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல்
 ஏது, இனிநீ முடிக்கப் போகும்
 கொற்றமுறு நூலேது? மேல்விளங்கு
 நூலென்ன? குணம தாக
 வெற்றிதரும் இலக்கணங்கள் ஏதேனும்
 பயின்றனையோ விள்ளு வாயே!”

இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும்
. பாட்டுகள்.

பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார்.

   - நபிகள் நாயக ஜீவிய சரித்திரம்,
   - சீறா நாடகம்,
   - தேவலோகத்துக் கிரிமினல் கேசு,
   - வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும்.

தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950
பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
 
இவர் மறைவுச் செய்தி அறிந்து
பண்டிதமணி கதிரேசச் செட்டியார்
 
“நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும்,
தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்,”

என்றார்.

இரசிகமணி டி.கே.சி. “பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும்
இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை,” என்றார்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 10:47:37 | Permalink | No Comments »

Saturday, May 2, 2009

SAMAYAM KADANTHA SATHAVATHANI

சமயம் கடந்த சதாவதானி   Read (1661 times)
on 10/31/2006 7:50:16 AM by SpaceTeam

காலங்கள் தோறும் சமயங்களை வளர்த்தது தமிழ்.

  சமயங்கள் தமிழை வளர்த்தன.  சமண, பௌத்த நூல்களும், சைவ வைணவ நூல்களும், கிறிஸ்தவ, இஸ்லாமிய நூல்களும் இவ்வாறு உருவானவையே. 

அந்தந்த சமயப் புலவர்களும், ஞானியரும் அழியாத காப்பியங்களை அளித்துச் சென்றுள்ளனர்.

 அந்த வரிசையில் வைத்து மதிக்கத் தக்கவரே மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர்.

“இந்தத் தலைமுறையில் மகாமதி பாவலருக்கு தமிழ்த்துறையில் இருந்த நுண்ணிய அறிவும்,
அபூர்வப் புலமையும் வேறு யாருக்கும் இருந்ததில்லை.

 அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் தமிழ் மொழியின் வரலாற்றுச் சரிதம் இன்றுவரை ஈன்றெடுத்து வளர்த்துக் கொண்டிருந்த முதுபெரும் புலவர் பெருமரபு இறந்துவிட்டது என்றுதான் அர்த்தம்” - இது ரசிகமணி டி.கே.சி.யின் மதிப்பீடு.

ஞானியார் அப்பா நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் ‘ இடலாக்குடி ‘ யில் வாழ்ந்து தமிழால் இஸ்லாமிய சமயத்தை வளர்த்தவர். 

அவர் மரபில் வந்த அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31இல் பிறந்தவரே செய்குதம்பி.

அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன.

  பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பிஇம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது. 

எனினும் இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது.

 அக்காலத்தில் இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார்.

  இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார்.  காளமேகப் புலவர்,
 மாம்பழக் கவிச்சிங்க நாவலர் போல
அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.

 அவரது தமிழ்ப்புலமை,கண்டு ஆசிரியரே வியந்து போனார்.

ஞானியார் அப்பாவின் ‘ மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு ‘ என்னும் நூலை அச்சிட  சென்னை ‘இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்கு ‘ தமிழறிந்த  இஸ்லாமியர் தேவைப்பட்டார்.

  சென்னை சென்று அந்நூலைச் சிறப்புடன் பதிப்பித்த செய்குதம்பிக்கு அப்போது வயது 21,

 அவரது அறிவாற்றலைக் கண்டு ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்திலேயே பிழை திருத்தும்  புலவராக அவரை அமர்த்திக் கொண்டனர்.  மாதம் ரூ60/-ஊதியமும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர்.  அவர் வறுமையை மறந்து வாழத் தொடங்கிய காலம்

 இதுவே.
இக் காலத்தில்தான் சிந்தையள்ளும் சிறந்த காப்பியமாகிய சீறாப்புராணத்துக்கு சீரிய உரையெழுதிப்பதிப்பித்தார்.

 வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு,  தேவலோகத்துக் கிரிமினல் கேசு என்னும் நூல்களும்எழுதிப் பதிப்பித்தார்.

  இதனால் இவர் புகழ் நாடெங்கும் பரவியது.  உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும், நிகழ்த்தினார்
.
  அஞ்சாமை கேட்பவரைக் கவரும் சொல்வன்மை, சமயச் சார்பற்ற நடுநிலைமை .

இட்டா பார்த்தசாரதி தலைமையில் நடந்த ஒருவிழாவில் அவருக்குப் ‘ பாவலர் ‘ என்னும் பட்டம்அளித்துப் பாராட்டினார்.

  அன்று முதல் செய்குதம்பி பாவலர் என்றே அழைக்கப்பெற்றார்.  அப்போது அவருக்கு வயது 27.

அக்காலத்தில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்று கூறுவது சமயக்குரவர்களை அவமதிப்பதாகும் என்று யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் கடுமையாக எதிர்த்து வந்தார்

.  கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.  தீர்ப்பு நாவலருக்கு எதிராக முடிந்தது.  எனினும்’அருட்பா?மருட்பா?’ விவாதம் தொடர்ந்தது.

இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே ஆறுமுக நாவலரும், வள்ளலாரும் மறைந்தனர்

.எனினும் ஆறுமுக நாவலரின் மாணவர் கதிர்வேல் பிள்ளை தொடர்ந்து அருட்பாவை எதிர்த்து வந்தார்.

 அவர் கூற்றில் நியாயம் இல்லை என்பதையறிந்த பாவலர், கதிர்வேலுக்கு எதிர்வேலாகக் களத்தில் குதித்தார். தம் வாதத் திறமையால் அருட்பா அணியை வெற்றிக்குக் கொண்டு வந்தார்.

ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க  வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

 அவரது இனிய சொற்பொழிவைப்  பாராட்டி ‘ தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ‘ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

  பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர்.  காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.

 இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார்

.  இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை ‘மருட்பா’ என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ‘ அவை அருட்பாதாம் ‘ என்று சொற்பொழிவாற்றினார்.

அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுதுஎன் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார்.என்று தம்  நாட்குறிப்பில் எழுதினார்.

பாவலர் அவதானக் கலையிலும் சிறந்து விளங்கினார்.

 1907 மார்ச் 10-சென்னை விக்டோ ரியா மண்டபத்தில் சதாவதானத்தை அரங்கேற்றினார்.

 வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமைதாங்கினார்.

  காஞ்சி மகாவித்துவான் இராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சதாவதானி சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன்கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் திருவேங்கடசாமி நாயுடு, புலவர் கா.நமச்சி வாய முதலியார் திரு.வி.க. , டி.கே.சி., முதலிய தமிழறிஞர்களும், இந்து சுதேசமித்திரன் ஆசிரியரான ஜி.சுப்பிரமணியஐயரும்,திரளான மக்களும் பார்வையாளர்களாக இருந்தனர்.

இந்த அவதானம் வெற்றி முழக்கோடு முடிந்ததை முன்னிட்டு பாமாலைகளும், பூமாலைகளும்,பொன்னாடைகளும் சாற்றப்பட்டன.

  நிகழ்ச்சிக்குக் காரணமாக இருந்த இட்டாபார்த்தசாரதி தங்கத் தோடாக்கள் இட்டுப் பாராட்டினார்.

 சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் ‘ மகாமதி ‘ பட்டம்வழங்கினார்.  தலைவர் ‘ சதாவதானி ‘ பட்டம் வழங்க, ‘ மகாமதி சதாவதானி ‘

 செய்குதம்பிப் பாவலர்வாழ்க’ என அரங்கமே மகிழ்ச்சி ஆராவாரம் செய்தது.

பாவலர் வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர்.  அன்றைய, ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

  1920நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார்.

 அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையிலேயேநடந்தன.

“1937ஆம் ஆண்டில் என நினைக்கிறேன் , பாவலர் நாகர்கோயில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார்.

  நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார்.

  அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்”என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர்வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.

பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர்.நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும்இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார்.  அவரது விடுதலைப் போராட்டத்தின்காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர்.  இதைக் கேட்ட பாவலர் நகைத்தார்

.  நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த இவருக்கு இது ஒரு பொருட்டோ ?

பாவலர் இறுதியாக உரையாற்றிய இடம் தஞ்சாவூர்.

 அப்போது அங்கு சொன்னார்; தாம் தஞ்சாவூருக்கு வந்திருப்பது, தம் சாவூருக்கு வந்திருப்பதாக சிலேடையாகக் கூறினார். அதன் பிறகுஅவர் நீண்ட நாள் வாழவில்லை.

1950 பிப்ரவரி 13-ல் அவர் காலமானார்.  அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணி தலைமை
தாங்கினார்

“ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பி
பாவலனை
எந்நாள் காண்போம் இனி”

என்று வருந்திப் பாடினார்.

பாவலரின் அரிய தொண்டினை அரசும், மக்களும் மறக்க இயலாது.

 பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது

.  பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு ‘பாவலர் தெரு’என்றே அழைக்கப்படுகிறது.  இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு ‘ சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

 அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

 இது தமிழ்ச் சங்கமாய்த் திகழ்ந்து அவரைப் போலவே தமிழ் வளர்க்க வேண்டும் என்பது அறிஞர்களின் விருப்பம்.

மத நல்லிணக்கத்தைப் பற்றி அரசியல்வாதிகள்பேசுவதை விட ஆன்மிகவாதிகளும், அறிஞர்களூம் பேசுவதே உண்மையான பயனை உலகுக்கு நல்கும்.

 பாவலர் வாழ்க்கையே அதற்கோர் எடுத்துக்காட்டு,இருட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பதை விட ஒரு சிறு விளக்கேனும் ஏற்றுவது மேலானதல்லவா!

(இன்று செய்கு தம்பி பாவலரின் 125_வது பிறந்தநாள்)
(கட்டுரையாளர், தமிழ்நாடு தனியார் பள்ளிஆசிரியர் சங்கஇதழாசிரியர்)
தினமணி நாள்:சனிக்கிழமை/31-7-1999

Re: சமயம் கடந்த சதாவதானி  
on 10/31/2006 10:10:55 AM by Bhuvan
(சத)நூறு அவதானம் என்பது சாதாரணச் செயலன்று.

 பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் நிரம்பியிருந்த சபையில்
 அவர்களின் வினாக்களுக்கு விடையளித்து,
கவிதை புனைந்து,
சீட்டாடி,
தம் முதுகில் எறியப்பட்ட கற்கள் எத்தனை,
நெல் மணிகள் எத்தனை,
தாம் குடித்த நீர் எந்தக் கிணற்று நீர்,
 எத்தனை முறை மணி ஓசை எழுப்பப் பட்டது
எனத்
 தம் புலன்களுக்கும் மூளைக்கும் கொடுக்கப் பட்ட அத்தனைச் சோதனைகளிலும் வென்று
சதாவதானிப் பட்டம் பெறுவது சாதாரணச் செயலன்று.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது செய்குத் தம்பிப் பாவலர் அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் அவ்வூர் ஜமாஅத்தின் இடத்தையும் சேர்த்து பாவலருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டினார்.

 அவரே திறந்தும் வைத்தார்.
 
பாவலரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடியதோடு, ஆண்டுதோறும் பாவலர் நினைவு நாள் அரசு விழாவாகவும் கொண்டாடப் படுகிறது.

 மேலும் அவ்வூர் அரசுப் பள்ளிக்கு சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அரசு மேநிலைப் பள்ளி என்றும் பெயர் மாற்றப் பட்டது.

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 20:48:29 | Permalink | No Comments »

THE FREEDOM FIGHTER WHO DECLINED THE THYAGI PENSION


     At a time when some freedom-fighters are running from pillar to post to avail thyagi pension from the government, a freedom-fighter Sadhavadhani Seygu Thambi Pavalar, who was offered thyagi pension declined to accept it in the early fifties.

        Sadhavadhani who hails from Nagercoil was born on 31 July,1874 as the third son of Pakeer Meeran sahib and Ameena.

        He had his earlier education at Edalakudi school where Malayalam was the medium of instruction as Nanjil Naadu was a part of Travancore Samasthanam then.

Though a bright student, he could not continue his studies due to poverty. Thereafter, he joined his father in his weaving profession. But his mind was inclined to education.

        His ardent desire for Tamil drove him to

        join theThinnai pallikoodam with Sankaranarayana Annavi as his guru in the adjacent Battariar Street. Pavalar’s involvement and dedication to Tamil language received the appreciation of his guru. Recalling

        his grandfather’s involvement in the Indian freedom struggle movement, Sheik Thambi, programme executive, All India radio, Thiruvananthapuram said that his grandfather associated himself with Mahatma Gandhi’s movement in the 1920s and most of his freedom struggle meetings in Nanjil Naadu were not without Pavalar’s participation.

       His extempore and humorous speeches had literary flavour which swayed the masses. There were no meetings without Seygu Thambi Pavalar in Nagercoil. More so he had the power of holding the crowd for hours together.

        Seygu Thambi Pavalar was an orator and an unrivalled scholar, who had the prodigious memory power to perform his Sadhavadhanam on 10 March,1907 at Madras Victoria Maharani Town Hall which was presided over by Vidwan Kannabiran Mudaliar and scholars like Mahavidwan Ramasamy Naidu, Thanjavur  Subramania lyer.Thiruvenkatasamy Naidu, who was the HoD of Tamil at Pachiappa’s College, Pulavar Namatchivaya Mudaliar, Thiru Vi Ka, TKC and The Hindu-Sudeshamithran newspaper editor G Subramania lyer participated and offered their felicitations to Pavalar.

 Thanjavur  Subramania lyer conferred the title of Mahamathi to Pavalar and the president of the function conferred on him the title of Sadhavadhani.

        During one of his visits, Mahatma Gandhi stayed at the third floor of Perumal Panicker building in Nagercoil and addressed a meeting organised there. Seygu Thambi enthralled the audience with his fiery speech full of wit and humour.

        Mahatma Gandhi complimented Pavalar by saying ‘If I could get one Pavalar in each language, I can get Indian Independence soon’. Seygu Thambi Pavalar’s involvement in the Indian freedom struggle movement was between 1920 to 1947.

    His keen interest in writing poems mostly on Indian freedom movement led him to edit two weeklies Edarthavathi and lslamiya Mithran during 1891.

        Pavalar was provided with the facility of free travel in a private bus, but it was withdrawn by the owner as he was actively involved in the freedom movement. Pavalar, who sacrificed everything for the sake of independence, showed no concern for this.

        The last meeting which Pavalar attended was at Thanjavur in 1950 and while on his return, he complained of chest pain and was bed-ridden for quite some time and his end came on 13 February, 1950.

   Pavalar’s son K P S Hamid, a retired Station Director, All India Radio, who passed away a few years ago maintained his father’s legacy in not accepting any benefits offered by successive governments.

        In a fitting tribute, a state-run school and a street in Edalakudi was named after him by the government of Tamilnadu.

        A mantapam in memory of Sadhavadhani in Edalakudi stands as a testimony to this freedom fighter which speaks volumes about his contribution to the Indian freedom struggle movement.

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 12:47:25 | Permalink | No Comments »

Friday, May 1, 2009

ALLAMA DR. SATHAVATHANI SHAIK THAMBI PAVALAR

குமரி மாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரில்



காங்கிரஸ் சார்பில் சுதந்திரப் போராட்டக் கூட்டம் 

முதன்முதலாக சதாவதானத்தை நிகழ்த்திக்காட்டிய

சாதனையாளரும் மிகச்சிறந்த தேசியவாதியுமான

 சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது

 திடீரென்று அவர்முன் ஒரு கல் வந்து விழுகிறது.

 மேடையிலிருந்தோரும் கூட்டத்தினரும் அதிர்ந்து விடுகின்றனர்.

 ஆனால் பாவலரோ நிதானமாக் கனிந்து அக்கல்லை

 எடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டுப் பேச்சைத் தொர்கிறார்.

இக்கல் பாவலர் மேல் எறியப்பட்ட கல் அன்று:

 மக்கள் விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரசின் மேல் எறியப்பட்ட கல்

. காங்கிரசின் பெயரால் பாவலர் மேல் விழுந்த இக்கல்,

கண்ணாடிப் பெட்டியில் காட்சிப் பொருளாக வைத்துப் போற்றப்பட

 வேண்டிய காலம் தொலைவில் இல்லை:

 அண்மையிலேயுள்ளது

. விடுதலைக்கு உழைத்த பாவலர் மேல் விழுந்த கல்‘ –

என்று பொறிக்கப்பட்டு போற்றப்படப் போகிறது?

- என்று உணர்ச்சி பொங்க பேசியபின்

 அக்கல்லை ஏலத்திற்கு விட்டார்

. கருங்கல் கனத்த பொருளைத் தந்தது. 

அப்பணம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 1920 – லிருந்து காங்கிரஸ் இயக்கத்தின்

 போராளிகளை வழிநடத்தியவர்கள்

,பாவலர்,டாக்டர் எம்.இ.நாயுடுசிதாணுப்பிள்ளை ஆகிய மூவர்தான்.

 இதில் பாவலரே போராட்டங்களுக்கு ஆஸ்தான தலைவர்.

புரவலரின் பேச்சாற்றல்

போராட்டங்களுக்கு மக்கள் வலுவைத் தேடித்தந்தது.

 அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த

 காலகட்டத்தில், இரவிப்புதூர் என்னுமிடத்தில் பாவலர் தலைமையில்

 ஒரு பெருந் தேசிய கூட்டம்,வ.வே.சு. ஐயர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

 பாவலர் பேச்சை ஆரம்பிக்கிறார் :

கூறை என்றால் திருமணத்திற்குரிய புது ஆடை,

 அதற்குக் கைத்தறி ஆடைகளை எடுப்பதே வழக்கம்:

 இறப்பின் போதும் புதுஆடை போர்த்துவது வழக்கம்

, அதற்கு மில் துணி எடுப்பர்.

எனவே மண ஆடையாக கைத்தறித் துணியையும்

 பிண ஆடையாக மில் துணியையும் அணிவர்

. எனவே நீங்களெல்லாம் மணமக்களா? பிண மக்களா?

 மணமக்கள் என்றால் கதர் மட்டுமே அணியுங்கள்!

- என்று கூட்டத்தினரின் சிந்தனையைத் தட்டி எழுப்பிவிட்டு பேச்சை முடித்தார்.

 உடனே கூட்டத்தினர் தாங்கள் அணிந்திருந்த மில்துணிகளையும், 

அந்நியத் துணிகளையும் களைந்து ஓரிடத்தில் குவித்தனர்.

 சிறிது நேரத்தில் அந்நியத் துணிகள் அங்கே தீய்க்கு இரையாயின.

நாகர்கோவில் தென் திருவாங்கூர்

 இந்துக் கல்லூரியில் நான் பயின்ற போது

,எனது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ.ந. மகாலிங்கம் அவர்கள்

 ஒருமுறை வகுப்பில் கூறினார் :

இரவிப்புதூர் கூட்டத்தில் கலந்து கொண்ட எனது தந்தையார்

 நமச்சிவாயம் அவர்கள், பாவலரின் பேச்சைக் கேட்டு,

 தான் அணிந்திருந்த அந்நியத்துணிகளைக் களைந்து

 தீச்சுவாலைக்கு தின்னக் கொடுத்து விட்டு,

 உள்ளாடையுடன் இரவிப்புதூரில் இருந்து

 எங்கள் ஊரான தெங்கம்புதூருக்கு 15 கிலோ மீட்டர் நடந்தே வந்தார்.

இந்நிகழ்ச்சி, பாவலரின் பேச்சு தென்பகுதிகளில்

 சுதந்திர சேவையின் சீவனாக விளங்கியமைக்குச் சான்றாகும்.

அறியாத இளம் பருவத்தே எனக்கு

அரசியல் ஞானப்பாலூட்டிய அம்மையார் மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் ஆவார்” –

 என்று பொருளாதார நிபுணர் டாக்டர் பா. நடராஜன் அவர்களும்:

 ”1937 - ம் ஆண்டில் நாகர்கோவில் நகராண்மைக் கழகத்திடலில்

பாவலர் பேசிய வீர முழக்கத்தில் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்” -

என்று தஞசைத் தமிழ் பல்கலைக்கழகத்தின்

 முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்களும்

 கூறியுள்ள சாட்சியங்கள்,

ஏராளமான இளைஞர்களின் உள்ளத்தில்

 சுதந்திர வேள்வியை மூட்டிய சிறப்பு பாவலருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.

பா. ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள்

 பாவலரிடம், இலக்கிய ஞானம் கற்றவர்களாவர். 

திலக் சுயராஜ் நிதி‘ – க்காக தெருத்தெருவாகப்

பாலர் தலைமையில் தேசியப் பாடல்களைப் பாடிச்சென்று நிதி வசூல் செய்தனர்.

காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டம்

 ஆரம்பித்தவுடன், கள்ளுக் குடியாதே ஐயா” என்ற இசைப் பாடலை

 எழுதி, ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தது

 எனப் பாவலரின் சுதந்திரப் போராட்டப் பணி பரந்து செல்கிறது.
 

;

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 19:05:17 | Permalink | Comments Off

PAVALAR SPEECH


 

http://groups.google.co.uk/group/anbudan/browse_thread/thread/233ca2f31023d93a

கிரிஜா மணாளன்  

இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை.
 
விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்பதை உலகுக்குக் காட்டவே

நபிகள் நாயகம் பல விதவைப் பெண்களை மணம் செய்துகொண்டார். 

ஒரு இளம்பெண் விதவை ஆகிவிட்டால்,  அவளை உடனே வேறு ஒருவனுக்கு 

கட்டிவைக்கவேண்டும்.  இல்லையேல் அவ்ள் வாழ்க்கையில் சிதறுண்டு
 
அழிந்துபோவாள். இதை உணர்த்துவதாகவே
 
அமைந்திருக்கிறது வேளாண்மையில்
 

வழங்கப்படும் ஒரு பழமொழி. 

 ”அறுத்தால் கட்டு! அல்லது அழியும்!” - என்பதே
அப்பழமொழி.
 

வயலில் நெற்கதிர்களை அறுத்தால் உடனே

கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவை 

சிதறி அழிந்துபோகும்.” என்பது பற்றி உருவான பழமொழி அது.
 

அவதான அருங்கலை விநோதராகவும்,

 புலவர்களுக்குப் புலவராகவும்,
 
பாவலராகவும்


நாவலராகவும்

விளங்கிய செய்குத்தம்பிப் பாவலர்

 ஒரு சமயம் குமரி 

மாவட்டத்தில்,
 
திருவிதாங்கோடு என்னுமிடத்தில் சீறாப்புராணச்
சொற்பொழிவில்

 
இப்படிக் கூறியுள்ளார். விதவை மறுமணத்தை ஆதரித்த பெருந்தகையாளர் அவர்

 
என்பது அவ்ர் சொற்பொழிவுகளிலிருந்து தெரியவருகிறது. 

- கி.ம. 

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar at 05:33:44 | Permalink | No Comments »